தமிழகம்

நிலத்திற்கு நத்தம் பட்டா வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

48views
கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் உத்திரகோசமங்கை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், (40) என்பவர் தன்னுடைய நிலத்திற்கு நத்தம் பட்டா கோரி விண்ணப்பித்தார். இம்மனுவை பரிந்துரை செய்து மேல்நடவடிக்கை எடுக்க உத்திரகோசமங்கை கிராம நிர்வாக அலுவலர் தமிழ்பாண்டியன், ரமேஷை நவ.15ல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து ரமேஷ் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகதில் புகார் மனு கொடுத்தார். இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் 3 ஆயிரத்தை தமிழ் பாண்டியனிடம் ரமேஷ் இன்று கொடுத்தார். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் தமிழ் பாண்டியனை (45) சுற்றி வளைத்து பிடித்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!