359views
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருப் பேரரான சங்கைக்குரிய ஞான மகான் ஜே. எஸ். கே. ஏ. ஏ. எச். மௌலானா அவர்கள் எழுதிய ’’உமர் ரலி புராணம்’’ எனும் காப்பிய நூல் வரும் 2023 ஜனவரி 5ம் தேதி வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ரமதா ஹோட்டலில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை விமரிசையாக நடக்கவுள்ளது.
இந்த புத்தக வெளீயீட்டு விழாவை, கலைமாமணி, முனைவர், பெருங்கவிக்கோ, வா.மு. சேதுராமன் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்கள். இந்நிகழ்வில் அமைச்சர் K.S. செஞ்சி மஸ்தான் அவர்கள், உயர்திரு திண்டுக்கல் I. லியோனி அவர்கள், உயர்திரு பேராசிரியர் K.M. காதர் மொய்தீன் அவர்கள், உயர்திரு சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், மற்றும் பல அறிஞர்கள், சான்றோர்கள் பங்கேற்று உரையாற்றியும் சிறப்பித்துத்தரவும் இருக்கிரார்கள்.
இஸ்லாமிய உலகில், குறிப்பாக தமிழ்கூறும் நல்லுலகில் ‘’உமர் ரலி புராணம்’’ என்ற இந்நூல் ஒரு மிகச்சிறந்த காப்பியமாகத் திகழ்கிறது என்பது மிகையாகாது.
தமிழ்கூறும் நல்லோர்கள், அறிஞர்கள் மற்றும் அனைவர்களும் இந்த புத்தக வெளீயீட்டு விழாவிற்கு வருகை தந்துச் சிறப்பிக்குமாறு ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச்சங்கம் விரும்பி அழைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது.
நன்றியுடன்,
ஏகத்துவ மெய்ஞ்ஞானத்தமிழ்ச்சங்கம் சார்பாக
எஸ்.ஷர்புத்தீன்
add a comment