கவிராசன் இலக்கியக் கழகத்தின் சார்பில், தொடர்ந்து 15-ஆவது ஆண்டாக, பாரதியார் பிறந்த நாள் விழா, புதுக்கோட்டையில் கொண்டாடப் பெற்றது.
விழாவிற்கு, தமிழ்ச்செம்மல் விருதாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை ஏற்றார். சிவகங்கை எழுத்தாளர் எஸ்.கே.எஸ். குமார் முன்னிலை வகித்தார். பால சாகித்ய புரஸ்கார் விருதாளர் கவிஞர் மு. முருகேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழாவை முன்னிட்டு, நீதான் அறக்கட்டளையுடன் இணைந்து, மாநில அளவில், பொது மக்களுக்கான ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு இருந்தது. அதில், இறுதி நடுவராக, பிரபல எழுத்தாளர், பட்டுக்கோட்டை பிரபாகர் செயல்பட்டு, பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து இருந்தார். முதல் பரிசு பெற்ற திருச்சி வி. தனலெட்சுமி, இரண்டாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை க. கோவிந்தசாமி மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற திருவாரூர் அ. வென்சி க்ளாடியா மேரி ஆகியோருக்கு, இந்த விழாவில் பரிசுகள் வழங்கப் பெற்றன.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக, கவிஞர் முருகபாரதி எழுதிய “குயில் காணாத ரசிகன்” எனும் கவிதை நூல் வெளியிடப் பெற்றது. இந்த நூலினை, கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட, கவிஞர் மு. முருகேஷ் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, பாரதியாரைக் கொண்டாடவும், கொண்டு சேர்க்கவும் தவறிய தமிழ்ச் சமூகம் குற்றமுடையது என்ற தலைப்பில், ஒரு வழக்காடு மன்றம் நடைபெற்றது. நடுவராக, நாகர்கோவில் பேராசிரியர் த. ராஜாராம் உரையாற்றினார். வழக்கினை நாகர்கோவில் பேச்சாளர் ரெ. ராஜ்குமார் தொடுக்க, திருச்சி பேராசிரியர் ந. விஜயசுந்தரி மறுத்துப் பேசினார்.
விழாவின் தொடக்கத்தில், கவிராசன் இலக்கியக் கழகத்தின் தலைவர் கவி. முருகபாரதி வரவேற்புரை ஆற்றினார். வழக்காடு மன்றக் குழுவினரை, செயலாளர் மகா. சுந்தர் அறிமுகம் செய்தார். விழா நிறைவில், பொருளாளர் கி. ஹரிமோகன் நன்றியுரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளை, துணைத் தலைவர் க. குருஸ்ரீராம். துணைச் செயலாளர் மு.ச. பாலாஜி மற்றும் நீதான் அமைப்பினர் செய்திருந்தனர்.
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.