தமிழகம்

உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

54views
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து தமிழக போலிசார் பல்வேறு கட்ட விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போலிசார் தலைக்கவசம் அணிந்து செல்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக டிஎஸ்பி நல்லு தலைமையில் போலிசார் மதுரை ரோட்டிலுள்ள போக்குவரத்து பணிமனை முன்பு பேரணியை துவங்கினர்.சாலை விதிகளை மதிப்போம் விபத்துகளை தவிர்ப்போம் தலைக்கவசம் அணிவோம் விலைமதிப்பில்லாத உயிரை காப்போம் என்ற கோஷத்துடன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். இதில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகளின் வழியாக பேரணியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். இதில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவல் துறையினர் தலைக்கவசம் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!