தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதி தமிழர் கட்சி திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – வெற்றி பெற தங்களுக்கு கட்சி முழு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றும் – பொதுச் செயலாளர் ஜக்கையன் பேட்டி

119views
மதுரை மாவட்டம் பேரையூரில் ஆதி தமிழர் கட்சி பொதுச் செயலாளர். ஜக்கையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் , வருகிற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்வதோடு , தங்களது முழு ஆதரவை திமுக கூட்டணிக்கு அளித்து அரும்பாடுபட்டு வெற்றிக்கனியை தருவோம் எனவும்,ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நற்சான்றிதழ் அளிக்கும் வகையில் அமைவதற்கு பாடுபடுவோம் எனவும், பாசிச சக்திகள் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிக்கு தங்களுடைய கட்சி முழு ஆதரவு அளிக்கும் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!