உலகம்உலகம்செய்திகள்

1 வாரத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட நபர்.. களத்தில் இறங்கிய உதவி குழுவினர்கள்.. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்..!!

64views

சுவிட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் பணி பின்னடைந்த நிலையில் தற்போது பனிச்சரிவில் சிக்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்விட்சர்லாந்திலிருக்கும் Lac de mauvoisin என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் வலாய்ஸ் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய அந்த 36 வயதுடைய நபரை தேடும் பணியில் அவசர உதவிகுழுவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனால் ஸ்விட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் பணி மிகவும் கடினமாக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு வாரத்திற்கு பின்னர் பனிக்குள் சிக்கிய 36 வயதுடைய அந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!