உலகம்உலகம்செய்திகள்

இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

68views

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளனர்.இலங்கையின் 6 மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளனர்.

கொழும்பு நகரின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மண்ணில் புதைந்தனர். அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் படைவீரர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர். 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!