இந்தியா

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் காலமானார்.

106views

த்மஸ்ரீ விருது பெற்ற இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

‘பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால், கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள்கிழமை) இரவு 11.30 மணிக்கு காலமானார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள டிவிட்டில், பத்மஸ்ரீ டாக்டர் கே.கே.அகர்வால் மறைவை உறுதி செய்துள்ளதுடன், அவர் மருத்துவர் ஆனதிலிருந்துதனது வாழ்க்கையை பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணித்து சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!