தமிழகம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் வேலூர் காட்பாடி காந்திநகரில் தேர்வு !

29views
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ராதா வில்வம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கத்தின் 13 -ஆவது பேரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் 2024-2028 ஆண்டுக்கான புதிய சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.  புதிய நிர்வாகிகள் கீழ்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டனர், தலைவராக ஆர் நாராயணசாமி, துணைத்தலைவராக ஆர் .துளசிராமன், செயலாளராக பொ. பாலகிருஷ்ணன், பொருளாளராக கே.சி. சங்கரன், இணை செயலாளராக டி. கோவிந்தராஜ்மற்றும் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வேலூர் கிளையில் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.  மாநிலத் தலைவர் எஸ்.பி .கருணாகரன், மாநில பொதுச் செயலாளர் என் ராஜ்குமார் மாநில துணைத்தலைவர்கள் நடராஜன் ,ஸ்ரீதரன், மாநில இணை செயலாளர் அண்ணாமலை, பாலச்சந்திரன் மாநில சங்க பொருளாளர் ஜோதி வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!