தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை தமிழகத்திற்கு கடத்தி வருபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் ஆகியவற்றை லாரியில் ஏற்றி வந்த இரண்டு நபர்களை ஊத்துமலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத டயர்கள் அடங்கிய கழிவுகளை கனரக வாகனத்தில் ஏற்றி வந்த புனலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலி வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த இடைத்தரகரான கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் தேவையற்ற கழிவுகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் ஆட்சியர் லீலா மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கே.எம்.வாரியார்...
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன் சாலை, முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா மிக...