தமிழகம்

கேரள கழிவுகளை தமிழகத்திற்கு லாரியில் ஏற்றி வந்த இருவர் அதிரடி கைது

126views
 
தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை தமிழகத்திற்கு கடத்தி வருபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் ஆகியவற்றை லாரியில் ஏற்றி வந்த இரண்டு நபர்களை ஊத்துமலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத டயர்கள் அடங்கிய கழிவுகளை கனரக வாகனத்தில் ஏற்றி வந்த புனலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலி வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த இடைத்தரகரான கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் தேவையற்ற கழிவுகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!