தமிழகம்

தேனிமாவட்டம் உத்தமபாளையம், எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

92views
உத்தமபாளையம் பை பாஸில் எஸ்டிபிஐ கட்சியினர் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளான இன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
உத்தமபாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் S. முஹம்மதுரபீக் வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் MS. சாதிக்அலி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்S.ரசூல்மைதீன் தொகுத்து வழங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் M. நிஜாம் முஹைதீன் கண்டன உரையாற்றினார்.
தமிழ்புலி கட்சியின் மாநிலத் துணை தலைவர்.மு.தமிழரசி ஆர்ப்பாட்ட உரையாற்றினார்.
மதினா பள்ளிவாசல் ஜமாத்தலைவர் M. பெரோஸ்கான், விசிக.மேற்கு மாவட்டச் செயலாளர் சோ, சு.சுருளி , பொதுக்குழு உறுப்பினர் கலீல் ரஹ்மான், மெளலவி A.M.ஜலீலூர் ரஹ்மான், திராவிடர் கழகம் தமிழ்ச்செல்வன், தமிழ்ப் புலி மணிவண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர பொருளாளர் A.சபீர்கான் நன்றி கூறினார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!