தமிழகம்

டிசம்பர் 6 – 1992 பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம் !

107views
ஜனநாயக சக்திகள் பங்கேற்ற பாசிச எதிர்ப்பு தின மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ! எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மேலூர் தொகுதி சார்பில் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது தாஹா தலைமையில் நடைபெற்றது மேலூர் தொகுதி செயலாளர் முஹம்மது சித்திக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான், செயலாளர் கமால் பாட்சா, வர்த்தக அணி பொருளாளர் கரீம் மற்றும் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள்,அனைத்து பள்ளி ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் ஜே.உமர் பாரூக், கண்டன பேருறை நிகழ்த்தினார் தொகுதி செயலாளர் ராஜா முகம்மது நன்றியுரை நிகழ்த்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா குழு செயலாளர் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாவு, திராவிட விடுதலை கழகம் மாவட்ட செயலாளர் மணியமுதன், வள்ளலார் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சக்தி ஹரிஹரன், ஜமாஅத்துல் உலமா சபை மேலூர் வட்டார தலைவர் சையது இப்ராஹீம், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!