தமிழகம்

மதுரை செல்லபிராணியை கடத்தி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு மீட்டு அதிரடிகாட்டிய உரிமையாளர்

394views
மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த நவ.,21 அன்று மாலை அவர் வளர்க்கும் செல்லபிராணியான ஜெர்மன் செப்ர்ட் நாயை சில மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாக அக்கம்பக்கத்தினர் அய்யப்பனிடன் தெரிவித்ததை தொடர்ந்து அவர் வீட்டில் பொருத்திஇருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தார்.
அதில் இரண்டு பேர் நாயை கடத்தி செல்வது பதிவாகி இருந்துள்ளது. தொடர்ந்து நாயின் புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் நண்பர்கள் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த நண்பர் ஒருவர் ஐயப்பனின் நாய் கோவில் பாப்பாகுடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு சென்ற ஐயப்பன் கடத்திச் சென்றவர்களிடம் இருந்து செல்லப்பிராணியை மீட்டதுடன் அவர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அவர்கள் அதிக மதிப்பு கொண்ட வெளிநாட்டு ரக நாய் என்பதால் விற்பனை செய்வதற்காக நாயை கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி தனது செல்லபிராணியை மீட்டுள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!