தமிழகம்

சோழவந்தானில் உலக நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்திரை

135views
மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹார ராதாகிருஷ்ண மகளிர் குழு சார்பாக, உலக நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்திரை நடைபெற்றது.   முன்னதாக தீபாவளி அன்று அம்மாவாசையையொட்டி ,பசுவன்பிள்ளை கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது.  விழா நாளான நேற்று.இரவு கிருஷ்ணன் கோவிலில் இருந்து பசுவன் பிள்ளை, ஊர்வலமாக வர பாலிகையுடன் வழி நெடுகிலும் கோலாட்டம் அடித்து இறைவனின் தோத்திரப் பாடல்களை பாடி சென்றனர்.
பின்னர், வைகை ஆற்றுக்குச் சென்று பசுவன் பிள்ளை பாலிகை உள்ளிட்டவற்றை கரைத்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது.
இதில் ,ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி. காளமேகம், மதுரை மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!