தமிழகம்

தனியார் பேருந்து- இரு சக்கர வாகனம் மோதல்: 3 பேர் பலி

321views
பனைக்குளம் கிராமத்திலிருந்து உத்திரமங்கை கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் பேருந்து, இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மானாமதுரையைச் சேர்ந்த அழகர் மகன் அன்பு 22, உத்திரகோசமங்கை கிராமத்தை சேர்ந்த மங்களம் மனைவி போதும்பொண்ணு 37 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துனர்.
இதில் காயமடைந்த மகேந்திரன் மகன் கார்த்திக் 23 சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மரு‌த்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உத்திரகோசமங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!