போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் வசிக்கும் பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 62, இதற்கு முன் முதல்வர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தவர். அரசு அதிகாரிகள் தொடர்பாக அவர் பேசும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அதில் அவர் கூறுவதாவது:மத்திய அமைச்சர், முதல்வர் என 11 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளேன். ஒரு பிரச்னை தொடர்பாக நாங்கள் விவாதித்து நடவடிக்கை மேற்கொள்வோம். அதிகாரிகள் எங்களை சுற்றி நிற்பர். அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கும் நாங்கள்தான், அவர்கள் எந்த பதவியில் இருக்க வேண்டும் என முடிவு செய்கிறோம். எங்கள் அரசியலுக்கு அவர்களை பயன்படுத்திக்கொள்கிறோம். எங்கள் செருப்புகளை மட்டுமே அவர்களால் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறுகிறார்.இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
104views
You Might Also Like
மதுவிலக்கு கொள்கையை கைவிட்ட மணிப்பூர் அரசு!
முனைவர் என்.பத்ரி மணிப்பூரில் கடந்த 30 ஆண்டுகாலமாக மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளது.ஆனால் இந்தக் கொளகையை மணிப்பூர் அரசு தற்போது கைவிட்டு விட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது...
ஈச் பவுண்டேஷன் சார்பில் பாடகர் கிருஷ்ணாவுக்கு ‘கலா ஶ்ரீ’ விருது. புதுச்சேரி அரசின் துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
ஈச் பவுண்டேஷன் சார்பில், சேர்மன் தமிழ்வாணன் முன்னிலையில் 'வெள்ளந்தி' படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமான பாடகர் கிருஷ்ணா அவர்களின் இசை சேவையை...
திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு வண்ணமின் அலங்காரம்
திருப்பதி - திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு ஸ்ரீவாரி கோயிலின் முகப்பு மற்றும் திருமலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை விடியற்காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு...
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்து அசத்தல்
கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் நீர்முழ்கி கப்பலில் ஜனாதிபதி திரெளபதிமுர்மு பயணம் மேற்கொண்டார். முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அவருடன் கடற்படை...
திருமலை ஸ்ரீவாரியில் லட்டின் தரத்தை ஆய்வு செய்த தேவஸ்தான தலைவர்
திருப்பதி - திருமலையில் உள்ள ஸ்ரீவாரி லட்டு கவுண்டரில் தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு ஆய்வு மேற்கொண்டார். லட்டுகளின் தரம் குறித்து பல பக்தர்களிடம் ஆலோசனை கருத்தினை கேட்டறிந்தார்....




