இந்தியா

மேகதாது அணை வழக்கு: 19ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

51views

மேகதாது அணை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீதான விசாரணை, வரும் 19ல் நடக்கிறது காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., ஆகிய நான்கு அணைகளை, கர்நாடக அரசு கட்டியுள்ளது.
இதனால், தமிழகத்தில் காவிரி நீரோட்டம் தடைபட்டு உள்ளது. இந்நிலையில், மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட, கர்நாடக அரசு முயற்சிக்கிறது. அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். இதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்திடம், கர்நாடக அரசு அனுமதி கேட்டுள்ளது.

மேகதாது அணை தொடர்பான விவாதம் நடத்த அனுமதிக்கப்படும் என, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறியுள்ளார். இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, மேகதாது அணை குறித்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில், 7ம் தேதி, தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.இந்த மனு, வரும் 19ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கு விசாரணையை பொறுத்தே, இம்மாதம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்குமா என்பது தெரியும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!