சினிமா

முதன்முறையாக வெந்து தணிந்தது காடு படத்திற்கு வேற லெவலில் களமிறங்கிய கௌதம் மேனன்!

65views

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், சிம்பு மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூவர் கூட்டணி அடுத்து இணையும் படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு இந்த படத்தில் நடிக்கிறார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக ஒப்பந்தமாகியுள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் திருச்செந்தூரில் ஆரம்பமானது. பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்நிலையில் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது, இந்த படத்தில் சிலம்பரசன் நெல்லை தமிழ் பேசி நடித்துள்ளதாகவும், கதைக்களம் நெல்லை மாவட்டத்தில் துவங்கி மும்பை வரை செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் சிம்பு, ஒஸ்தி படத்தில் நெல்லை தமிழ் பேசி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் படத்தின் பிரதான கதாநாயகன் நெல்லை தமிழ் பேசி நடிப்பது இதுவே முதன்முறையாகும். கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!