நேபாளத்தில் இன்று அதிகாலையில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகாராவிலிருந்து கிழக்கே 35 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ் (USGS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தின் அருகில் வசித்தவர்களுக்கு பூகம்பத்தின் தாக்கம் அதிகம் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
காத்மாண்டுவிலிருந்து 113 கி.மீ வடமேற்கில் நேபாள நாட்டின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. “10 நிமிடங்களுக்கு முன்பு காத்மாண்டுவில் (Nepal) 113 NW ஐ பூகம்பம் (earthquake) தாக்கியது” என்று EMSC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை. பூகம்பத்தால் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
“லாம்ஜங் மாவட்டத்தின் புல்பூலே (Bhulbhule of Lamjung District) என்ற இடத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது, அங்கு இது 5:42 NPT இல் நிகழ்ந்தது. 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது” என்று தேசிய பூகம்ப கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (National Earthquake Monitoring & Research Centre) தலைமை நில அதிர்வு நிபுணர் டாக்டர் லோக் பிஜய் ஆதிகாரி தெரிவித்துள்ளார்.
170views
You Might Also Like
திறப்பு விழா நிகழ்ச்சி.
அபுதாபி: நாள் : 16/07/2026 வியாழக்கிழமை மாலை அபுதாபி சலாம் சாலையில் தமிழ் சொந்தங்களால் அபுதாபி வாழ் குழந்தைகளுக்காக மிக சிறப்பம்சங்கள் கூடிய GLOW AND GROW...
அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் பொதுச்செயலாளராக கீழக்கரை முபாரக் முஸ்தபா தேர்வு
அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. இந்த புதிய நிர்வாகக்குழுவின் தலைவராக மது ஓமனகுட்டனும், பொதுச் செயலாளராக...
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு ஜூஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
துபாய் : அமீரக தொழிலாளர் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும், அரசின் அங்கீகாரம் பெற்ற சமூக சேவை அமைப்பான கிரீன் குளோப் சார்பில் உழைப்பாளர் தாகம்...
துபாயில் கவிஞர் இரா.இரவியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
துபாய் : துபாய் கல்வி நகரத்தில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறை பேராசிரியர் முனைவர் சித்திரை பொன் செல்வன்...
துபாயில் நடைப்பெற்ற கிரீன் குளோப் சார்பில் உழைப்பாளர் தாகம் தணிக்கும் மனிதநேய நிகழ்ச்சி
அமீரகத்தின் கடும் வெய்யிலயும் பொருட்படுத்தாமல் உழைத்திடும் தொழிலாளர்களின் நலன் நாடும் விதமாக, கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும், அமீரக அரசின் அங்கீகாரம் பெற்ற சமூக சேவை அமைப்பான...




