இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 18,819 ஆக அதிகரிப்பு

363views

இந்தியாவில் நேற்று (ஜூன் 29) 14,506 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 18,819 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,52,164 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,827 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,28,22,493 ஆனது. தற்போது 1,04,555 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 39 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,116 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 197.61 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 14,71,217 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!