தமிழகம்

வேலூரில் பெண்ணிடம் நிலப்பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி ரூ.8 லட்சம் பணத்தை அபேஸ் செய்த தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சந்தோஷ்குமார் கைது

42views
வேலூர் மாவட்டம் வேலூரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்றுதரும்படி வேலூர் மாவட்ட தமிழ் மாநில பகுஜன்சமாஜ் நிர்வாகி சந்தோஷ்குமாரை அணுகி உள்ளார். அதற்கு சந்தோஷ் வேலையை முடித்து தராமலும், பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பெண் வேலூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து தமிழ் மாநில பகுஜன் சமாஜ் நிர்வாகி சந்தோஷ்குமார், பிரச்சினையின் கூட்டாளியான வேலூர் அணைக்கட்டு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கோட்டி (எ) கோவேந்தனையும் கைது செய்தனர். கோட்டி ரூ.40 லட்சத்தை ஏமாற்றியையும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கைது செய்யப்பட்டார்.
மேலும் சில நபர்களையும் காவல்துறையும் தேடி வருகின்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!