தமிழகம்

வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி, பெருமாள் கோவிலில் திறக்கப்பட்ட பரமபதவாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசலினுள் நுழைந்து தரிசனம்.

70views
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் , பெருமாள் திருத்தலங்களில் சிகர நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி தினத்தை  முன்னிட்டு , ஸ்ரீசீனிவாச பெருமாள் பொன்னிற ஆடையில் அலங்கரித்து, பல்லக்கில் சுமந்தபடி சிறப்பு பூஜைகள் நடத்திய பின்பு,  கோவிலினுள் வலம் வந்தபின், அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பரமபத வாசலில் , வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சீனிவாச பெருமாள் பல்லக்கில் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசலில் நுழைந்து செல்ல, பின் தொடர்ந்து ஏராளமான பக்தர்களும் அந்த வாசல் வழியாக நுழைந்து தரிசனம் மேற்கொண்டனர் .  ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு பரமபத வாசல் என்ற சொர்க்கவாசலில் நுழைந்து தரிசனம் மேறகொண்டால் நமது ஆன்மா சொர்க்கத்திற்கு செல்லும் என்பது ஐதீகம்.

 

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!