தமிழகம்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு, சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

20views
விருதுநகர் மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், தயாரிப்பாளர்/நடிகர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்டு, பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளி நிறுவனங்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கப்பட்டது.

மேலும், பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகங்களைச் சேர்ந்த 30 பேருக்கு வெள்ளி ஷீல்டுகள் வழங்கப்பட்டன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!