தமிழகம்

சிவகாசி சிவன் கோவிலில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

281views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி – ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோவிலில், இன்று தேய்பிறை அஷ்டமி நாளை முன்னிட்டு, பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி – ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமி நாளை முன்னிட்டு பைரவர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் பைரவர் சுவாமி சன்னதி முன்பு நெய் விளக்கு, இலுப்பை எண்ணெய் விளக்கு, நல்லெண்ணெய் விளக்கு, தேங்காயில் மிளகு விளக்கு, தானியங்களை பரப்பி வைத்து விளக்குகள் ஏற்றி வைத்து பைரவர் சுவாமியை வணங்கி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!