உள்ளங்களே உழவனின் அகம்
புத்தரிசி பொங்கலில் வெண்மையாய் பொங்குது வாழ்வு பொங்கல் உள்ளங்களே உழவனின் அகம் சுவைக்க சொல்லுங்கள் பொங்கலோ பொங்கல் புலர்ந்த சூரிய கதிர்களில் பொங்கி ஒளிர்கிறது பொங்கல் திருநாள் வெளிச்சம் காலத்தின் தோரணையில் மஞ்சள் நிறம் படர்ந்து இயற்கையின் உதட்டில் பூசணிப்பூ பதித்து வாழ்வெங்கும் வருகிறது தைத்திருநாள் புன்னகை கரும்பின் இனிப்பில் பொங்கி வழிகிறது மங்காத நல்வாழ்வின் தைச்சுவை தை உழவர் திருநாள் தமிழர் பெருநாள் தை துன்பத்தை நறுக்கி மகிழ்வை...