archiveகவிதை

கவிதை

பூக்கும் கண்ணாடி

எனக்கும் வேண்டும் எனக்கும் வேண்டுமென ஒவ்வொருவராக மாற்றி அணிந்து தாத்தாவின் சாயலை சொந்தமாக்கி விளையாடிய மூக்கு கண்ணாடி தவறி விழுந்து சிறு விரிசல் விழுகையில் பாவமென முகத்தை வைத்து கொண்டு தாத்தாவை பார்க்கும் பேரக்குழந்தைகளை செல்லமாக குட்டு வைத்து விரட்டிய பின் கீழே விழுந்த மூக்கு கண்ணாடியை கையில் எடுத்து பத்திரப்படுத்துகிறார் குழந்தைகளை காணாத நேரங்களில் மூக்கு கண்ணாடியின் விரிசல்கள் நினைவு பூக்கும் கண்ணாடியாகிறது.... நிழலி...
கவிதை

எஸ்.ராஜகுமாரன் கவிதைகள்

மழை பொதுதான். அதன் சுகமும் துயரும் பொதுவல்ல! நீங்கள் உங்கள் மழையில் நனைவீர்கள் . நான் என் மழையில் காய்வேன். அவ்வளவுதான் சிட்டுக்குருவி எழுந்து சென்ற கிளையில் வண்ணத்துப்பூச்சி வந்தமர்கிறது. வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்திருந்த செடியில் சிட்டுக்குருவி சென்று அமர்கிறது. சிறகுகள் வேறு வேறு. கிளைகள் ஒன்றுதான் வானம் வரைய முயன்றேன். இயலவில்லை. நிலம் வரைந்து தோற்றேன். நீர்மையை வரைவது கை கூடவே இல்லை. தீயின் வண்ணம் காற்றின் கோடுகள் காகிதத்துக்குள்...
கவிதை

காந்தி பிறந்த நாள் – உறுதியேற்பு

இந்திய நாடு எங்களின் நாடு ரத்தம் சிந்திய தியாகிகள் நாடு காந்தி பிறந்த அகிம்சை நாடு இங்கே கோட்சேக்களுக்கு ஏது நாடு இந்திய நாடு எங்கள் நாடு பல மொழிகள் பேசும் மக்கள் நாடு இந்திய நாடு எங்கள் நாடு பல மதங்கள் இருந்தும் ஒற்றுமை கூடு காந்தி பிறந்த இந்நாளில் மக்கள் நாங்கள் ஒன்றாய் கூடி ஒற்றுமை கீதம் பாடுகிறோம் ஒருபிடி மண்ணும் எங்கள் சொத்து இங்கே சங்கிகளுக்கு...
இலக்கியம்நிகழ்வு

தூண்டில் – இனிய நந்தவனம் – தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் நடத்திய “தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022”

திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் கடந்த ஜூலை 17 அன்று தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022 சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை தூண்டில் - இனிய நந்தவனம் - தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின. இம்மாநாட்டை கல்வியாளர் செளமா ராஜரத்தினம் தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ...
கவிதை

நிழல்

மரத்தடியிலமர்ந்து நான் எழுதும் முன்பே என் தாள்களில் மரம் எழுதியது ஓர் அழகிய கவிதையை பறவைகளின் இசைக்கேற்ப பாடுவதைப் போல் அது அசைந்து கொண்டேயிருந்தது ஆனால் அதன் ஓசைகளை கிளைகள் வைத்திருந்தன பறக்கும் பறவைகளின் நிழல்களுக்கு என் தாள்களில் கூடுகள் கிடைக்காமல் அலைந்துகொண்டேயிருந்தன நிழலை வரைகிறது வெளிச்சத் தூரிகை அசைத்து அழிக்கிறது காற்று வாசிக்கத் தொடங்கிவிட்டேன் நிழலின் மொழி அத்தனைக் குளிர்ச்சியாக இருந்தது. பாரிகபிலன்...
கவிதை

பழைய நினைவுகள்

10.4.2022 “ரமணி ராஜ்ஜியம்” கவியரங்க நிகழ்ச்சியின் சிறந்த கவிதையாக கீழ்கண்ட கவிதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. கவிஞர் திரு.விநாயகமூர்த்திஅவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை NaanFM நிலையம் தெரிவித்துக் கொள்கிறது. பழைய நினைவுகள் ஒன்பதாம் வகுப்பில் ஓதிப் படிக்கையில் என்வீட்டுக் குடும்பம் இருபதெட் டிருந்தோம் பத்தாம் வகுப்பில் தந்தையின் வழியில் மொத்தமாய் இருந்தோம் முடிவாய் எட்டுபேர் சத்தமிலா(து) என்சங்கமம் சார்வாய் நாலுபேரே கடைசி சட்டி கூழ்கரைத்து பாட்டியும் அடைத்திட்டாள் எம்பசி அடைந்தோம் நிம்மதி படைத்தோம் ஆனந்தம்...
கவிதை

வடுக்கள்

27.3.2022 அன்று ரமணி ராஜ்ஜியம் நிகழ்ச்சியில் "வடுக்கள்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. ஆகச்சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் சாந்தி சந்திரசேகர் அவர்கள். தலைப்பு : வடுக்கள் எண்சீர் மண்டிலம் வடுக்களென்று சொல்வதெல்லாம் வலிகள் என்றே வழக்காக்கிப் பழக்கிவிட்டோம் வாழ்வில் நாமே படுகின்ற புண்களினால் வாழ்வில் வீரர் பாராட்டப் படுவரன்றோ பாங்காய் நாளும் விடுகின்ற வடுவளையம் விளைத்த ஓலை விளக்குமன்றோ பனைமரத்தின் முதிர்ச்சி தன்னை படுகின்ற அனுபவங்கள்...
கவிதை

புறத்தோற்றம்

20.3.2022 அன்றைய “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் “புறத்தோற்றம்” என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் ஆகச் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் –தஞ்சை பழ வள்ளியப்பன் அவர்கள். புறத்தோற்றம் தோற்றத்தில் என்ன உண்டு அழகு மனதுக்குள் வர வேண்டும் தெளிவு சிந்தனையில் திறமதனை வளர்த்து நெஞ்சமதை நல்வழியில் செலுத்து கறுப்பென்றும் சிகப்பென்றும் ஒரு மாயை உள்ளத்தில் விதைத்து விடும் நோயை அகமதனை ஆக்கிடுவோம் புது மலரென நேசம் காத்து...
கவிதை

மூலாதாரம்

13.3.2022 அன்றைய "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் "மூலாதாரம்" என்ற தலைப்பில் ஆகச் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் -வேணு.தேன்மொழி. மூலாதாரம் மனித இயக்கத்தின் மந்திரம்... மகத்துவம் கண்ட தத்துவம்.. மாய உலகின் தனித்துவம்.. தனிமனித ஒழுக்கமே துறவரம். ஆன்மீகம் என்ற பிரணவம்... அண்டங்கள் யாவும் ஔிமயம்... ஓங்காரம் என்ற நாதம்... நம் உயிரில் கலந்த வேதம்... வேண்டுதல் யாவும் யோகம்... நம் வாழ்க்கை சக்கரத்தின் ஆதாரம்.. முதலும்...
கவிதை

மகளிர் தின சிறப்பு கவிதை

"பூச்சூடும் மங்கை இவள் பூமியின் அரசி இவள் சூரியனின் ஒளி இவள் சுட்டெரிக்கும் தீ இவள் அமைதியின் அன்பு இவள் ஆட்சி செய்யும் புதுமை பெண் இவள் குடும்பத்தின் வேர் இவள் குறையாத செல்வமும் இவள் புல்லாங்குழலின் இசை இவள் புத்தகத்தை தேடி வந்து பல சாதனைகள் புரிந்திடுவாள் பண்பை பார்த்து பகுத்தறிவை வளர்த்திடுவாள் பாசக்கூட்டுக்குள்ளே பக்குவமாய் நடந்திடுவாள் ஆணும் ,பெண்ணும் சமம் என்று ஆழமாய் புரியவைப்பாள் கற்பை பாதுகாக்க...
1 2 3 4 5 6
Page 3 of 6

Right Click & View Source is disabled.

error: Content is protected !!