தமிழகம்

கழக அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி, டி.குன்னத்தூரில் சமத்துவ சமுதாய திருமண விழா – முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

61views
கழக அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் 51 சமத்துவ சமுதாய திருமண விழாவை நடத்தி வைக்கிறார்.
இந்த திருமண விழாவிற்கு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேடப்பட்டி ஒன்றியம், ஏழுமலை பேரூராட்சிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது தாயார் மீனாள், அவரது மகள் U.பிரியதர்ஷினி ஆகியோர் திருமண அழைப்பிதழ் கழக நிர்வாகிகளுக்கு வழங்கி அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.பிச்சைராஜன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் திருD.தன்ராஜ், ஏழுமலை பேரூர் கழகச் செயலாளர் திரு.வாசிமலை மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.மகேந்திரபாண்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!