தமிழகம்

அரசு பேருந்தில் சென்ற பயணிகளை கோடை வெயிலை சமாளிக்க குளிர்வித்த பெண் எம்எல்ஏ

24views
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என அன்பை பொழிந்து எம்எல்ஏ தமிழரசி பயணிகளுக்கு வழங்கி குளிர்விக்க செய்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் கோடை வெய்யிலை சமாளிக்க மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையத்தில் நீர் மோர் தர்பூசணி பழங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகளுக்கு வழங்கிய பின் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி பேருந்துக்குள் ஏறி மோர், தண்ணீர், தர்பூசணி பழங்களை டிரைவர் மற்றும் நடத்துனர் பயணிகளுக்கும் , நேரடியாக சென்று வழங்கி சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என அன்பைப் பொழிந்து நீர் மோர்,பழங்களை கொடுத்து குளிர்விக்க செய்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!