தமிழகம்

மாசு கட்டுப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி

30views
ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப் படை, ஆர்.எஸ்.மங்கலம் கோல்டன் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய மாசு கட்டுப்பாடு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் கோல்டன் ரோட்டரி கிளப் தலைவர் நல்லாசிரியர் எஸ்.கருணாகரன் தலைமை வகித்தார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட், திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர்நிரேஷ் விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டார அதிபர் கிளமென்ட் அடிகளார், ஆர் . எஸ். மங்கலம் ஒன்றிய தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், கோல்டன் ரோட்டரி கிளப் செயலர் பாண்டியன் ஆகியோர் பேசினர். மாசு குறித்து கவிதை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!