தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியதை ஆதாரத்துடன் நிரூபித்தால் நாங்கள் அனைவரும் சாமியாராகி விடுகிறோம் என சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்தார்.

301views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
பன்னீர் செல்வம் தலைமையில்  அதிமுகவினர் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு செல்வது குறித்தும் பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் பேசும் போது; 90 சதவீதம் அதிமுக நிர்வாகிகள் தன் பக்கம் இருப்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி ஏன் தங்க கவசத்தை மீட்டு கொண்டுவர முடியவில்லை. நல்ல ஆம்பளையாக இருந்தால் பசும்பொன் வந்து பார் என சவால் விட்டார்.
மேலும் ஓபிஎஸ் ஸ்டாலினிடம் பேசிய ஆதாரம் நிரூபித்தால் ஓபிஎஸ் அணியிலிருந்து அனைத்து நிர்வாகிகளும் சாமியாராக சென்று விடுவோம் பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை செருப்பால் அடித்து விரட்டியது மறக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!