தமிழகம்

சிவகாசி கோவில்களில், பக்தர்கள் கூட்டம் குவிந்தது

46views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இன்று ‘2023’ ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் இன்று அதிகாலை ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்குச் சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கருப்பசாமி கோவில், ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவில், ஸ்ரீஅய்யப்பன் கோவில், கடைக்கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புத்தாண்டு தினம் என்பதால் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!