தமிழகம்

விருதுநகர் அருகே, 6ம் வகுப்பு மாணவர் மாயம்

46views
விருதுநகர் அருகேயுள்ள சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது மகன் மாதவன் (12). மாதவன், அல்லம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற மாணவர், மதியம் உணவு இடைவேளையின் போது பள்ளியிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வரவில்லை. மாதவன் தன்னுடைய வீட்டிற்கும் செல்லவில்லை. மாதவனின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் காணாமல் போன மாணவரை தீவிரமாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து, காணாமல் போன பள்ளி மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!