தமிழகம்

மதுரையில் தேமுதிக மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி பா. மணிகண்டன் தலைமையில் ஈரோடு மாவட்டம் இடைத்தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

85views
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைப்படி மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக முத்துப்பட்டி பா.மணிகண்டன் தலைமையில் ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாநகர் தேமுதிக தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன் ஆலோசனை கூறியதாவது ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பாக ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் ரமேஷ் வேட்பாளராக கேப்டன் அவர்கள் அறிவித்திருக்கிறார் அவரை வெற்றி பெற செய்வதற்கு தலைமைக் கழகம் நம்முடைய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளில் தீவிரமாக கட்சிப் பணியாற்ற வேண்டும் தேர்தல் முடியும் வரை ஈரோடு மாவட்டத்தில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தங்கி தேர்தல் பணி ஆற்ற வேண்டும் இந்தத் தேர்தலில் நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் நமக்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளில் அதிக ஒட்டு வாங்கி தரும் நிர்வாகிகளுக்கு மாவட்ட கழக செயலாளர் சார்பில் அரை பவுன் செயின் மேதிரம் வழங்கு படும் என்று தெரிவித்தார். இதனால் கழக நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமர், பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் C.P செந்தில் , பொதுக்குழு உறுப்பினர் அடைமழை ஜெயராமன், பகுதி கழக செயலாளர் மோகன்,மாரியப்பன், பத்மநாபன் ,தனபால், லட்சுமணன், தொண்டர் அணி செயலாளர் முருகன், மகளிர் அணி செயலாளர் பொன்னுதாய், மற்றும் வட்டகழக செயலாளர்கள் , பகுதிகழக நிர்வாகிகள், தொண்டர்படை நிர்வாகிகள்,கேப்டன் மன்றம் நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!