மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்
88
மாட்டுத் தாவணி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரபல ஜவுளிக்கடையில் கைவரிசை செயின் திருடிய இரண்டு பெண்கள் கைது
மாட்டுத்தாவணி அருகே புதிதாகதிறக்கப்பட்ட பிரபல ஜவுளிக்கடையில் கூட்ட நெரிசலில் செயின் திருடிய இரண்டு பெண்கள் கையும்களவுமாக பிடிபட்டனர்.
அழகர் கோவில் மெயின் ரோடு முத்து மணி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரஞ்சித் குமார் 39. இவர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்ட பிரபல ஜவுளி கடைக்கு சென்று இருந்தார். கடை திறந்தநாளிலிருந்து அங்கு கூட்டம் நெரிசலும் போக்குவரத்து நெரிசலும் பெருமளவில் இருந்து வருகிறது. கூட்டத்தில் இரண்டு பெண்கள் ரஞ்சித் குமார் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருட முயன்றனர். அப்போது அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது செக்கானூரணி பன்னியான் ரோட்டை சேர்ந்த சுமதி 50 அதே, ஊரைச் சேர்ந்த சரவணன் மனைவி பிரியதர்ஷினி 28 என்று தெரியவந்தது. கையும் களவுமாக பிடிபட்ட அவர்கள் இருவரையும் மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.
தெற்குவாசல் பாலம் அடியில் கத்தி முனையில் வழிப்பறி : ஒருவர் கைது .
மதுரை டிச 12 தெற்கு வாசல் பாலம் அடியில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மேல தோப்புவை சேர்ந்தவர் ஜெயபால் 43. இவர் தெற்கு வாசல் என்.எம.ஆர்.பாலம் அடியில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து ஒருவர் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து ரூபாய் ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து ஜெயபால் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட காஜா தெருவை சேர்ந்த மகாலிங்கம் 51 என்பவரை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் ஆர்.விப்பட்டியில் பெண் தூக்கு போட்டு தற்கொலை – காரணம் என்ன போலீஸ் விசாரணை.
திருப்பரங்குன்றம் ஆர்விபட்டியை சேர்ந்தவர் அன்னபூரணி 55. இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் வீரசின்னன் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னபூரனியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தத்தனேரி வயல் காட்டு பகுதியில்
ஆக்டிங் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை.
தத்தனேரி வயல்காட்டு பகுதியில் ஆக்டிங் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தத்தனேரி களத்து பொட்டலை சேர்ந்தவர் மருதுபாண்டி 57. இவர் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சில தினங்களாக மன அழுத்தமாக இருந்து வந்தார். இந்த நிலையில் தத்தனேரி வயல்காட்டு பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி கார்த்திகா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆக்டிங் டிரைவர் மருது பாண்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே கஞ்சாவுடன் ஒருவர் கைது
ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பகுதியை கண்காணித்து வந்தனர் .அப்போது ஒருவர் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து சோதனை செய்தனர் அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் உசிலம்பட்டி கட்டதேவன் பட்டியைச் சேர்ந்த முத்து கண்ணன் மகன் நல்லதுறை 47 என்று தெரிய வந்தது .அவரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பைபாஸ் ரோட்டில் மருத்துவமனை அருகே பெண்ணிடம் மூன்று பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை.