கேலரி

சனவரி 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் துபாய் மற்றும் புஜைராவில் நடைபெற்ற மாஸ் ஈவென்ட்ஸ் – ன் “பொங்கல் ஓ பொங்கல்” மாபெரும் பொங்கல் திருவிழா

474views
மாஸ் ஈவென்ட்ஸ் வழங்கும் POP-2023 என்ற பொங்கல் விழா துபாய் மற்றும் புஜைரா சனவரி 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இவ் விழாவின் சிறப்பம்சம் :
கல்விக்கோ VIT பல்கலைக் கழக வேந்தர் உயர்திரு.விஸ்வநாதன் அவர்களும், நேர்மை வேந்தர் போற்றுதலுக்குறிய திரு.சகாயம் IAS அவர்களும் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
உலகப் பொதுமறை திருக்குறளுக்கு பெருமை சேர்க்க தமிழ் மக்களனைவரும் 133 குழுக்களாக பொங்கல் வைத்தனர்.
133 மகளிர் மற்றும் குழந்தைகள் ஓன்று சேர்ந்து அசத்திய கோலாட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.  தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள், சிலம்பாட்டம் இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
உலகளாவிய தமிழ் தலைவர் முனைவர் ஜெயந்திமாலா சுரேஷ் அவர்கள் வரவேற்க மாஸ் ஈவென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சுமதி முருகேசன் அவர்கள் நன்றி கூற விழா சிறப்பாக நடைபெற்றது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!