தமிழகம்

உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கழுவநாதன் விருமாண்டி கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

75views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருமாத்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கழுவநாதன் விருமாண்டி கோவிலில் சிங்கம்புணரி சேவகர் சிவாச்சாரியார் தலைமையில் 37 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் ஆறு கால யாகசாலை போது நடைபெற்று முடிந்தது.பின்னர்; கோமாதாவுக்கு பூஜைகள் நடைபெற்றது.இதன் பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றது.சிவச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினர்.முன்னதாக 300க்கும் மேற்ப்பட்ட பெண்கள் விரதமிருந்து பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்தது சாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.இந்நிகழ்ச்சிக்கு உள்ளுர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பொது மக்களின் நலன் கருதியும் பக்தர்கள் நலன் கருதியும் டிஎஸ்பி நல்லு தலைமையில் ஏழு அடுக்கு பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!