தமிழகம்

கெலமங்கலத்தில் நடைப்பெற்ற பாமக கலந்தாய்வு கூட்டம்

114views
ஓசூர் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக கலந்தாய்வுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது.  கூட்டத்திற்க்கு மேற்கு மாவட்ட செயலாளர் கி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். முன்னால் மாவட்ட தலைவரும், மூக்கண்டப்பள்ளி முன்னால் பஞ்சாயத்து தலைவருமான பா.முனிராஜ் சிறப்புரையாற்ற இந்த ஆலோசனை கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது.
வரும் 28-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட பொதுக்கூட்டத்திற்க்கு வருகை தரும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்களை வரவேற்பது பற்றியும், கூட்டத்திற்க்கு அதிகப்படியான பாமக தொண்டர்களை ஒன்றுதிரட்டவும், அனைத்து பகுதிகளிலும் பாமக கட்டமைப்பை மேம்படுத்தவும் குந்துமாரனபள்ளி ஊராட்சி C.தம்மன்றபள்ளி கிராமத்தில் தின்னைப்பிரசாரம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மக்களின் உரிமைக்காக, அரசியலமைப்புச் சட்டத்துக்காக, விளிம்புநிலை மக்களுக்காக, ஏழை மக்களுக்காக பாமக ஏன் போராடுகிறது என்பதை மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக நிர்வாகிகள்:
சுரேஸ்ராஜன் மாநில செயர்குழு உறுப்பினர், முத்துராஜ், சசிகுமார், காளியப்பன், பவன், குமார், வடிவேல், வெங்கடேஷ், காளியப்பன், நவீன், சங்கர் பிரசாந்த், ஆகாஷ், கேசவன், ராஜேந்திரன், லோகித், கிஷோர், ரஜினிகாந்த் சுரேஷ், நந்தி, முனியேந்திரன், சூர்யா மற்றும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!