தமிழகம்

உசிலம்பட்டி அருகே தொடர் மழை காரணமாக குளம் போல் காட்சியளித்த அரசு பள்ளி உடனடியாக சீரமைத்து கொடுத்த எம் எல் ஏ

135views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கழுங்குபட்டியில் இயங்கி வரும் ஆரம்ப அரசு பள்ளியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பள்ளியில் குளம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளித்தது மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு படிக்கச் செல்ல முடியாமல் தவித்து வந்து மேலும் படிப்பை கைவிடாமல் தெருவோரத்தில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்று தந்து வந்தனர்.
இதனை அறிந்த எம்எல்ஏ ஐயப்பன் விரைந்து சென்று கழுங்குபட்டியில் உள்ள பள்ளியில் தேங்கி இருக்கும் தண்ணீரை உடனடியாக அகற்றுவதற்கு ஏற்பாடு செய்து சொந்த செலவில் சீரமைத்து கொடுத்தார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு வழக்கம்போல் சென்றனர்.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றி கொடுத்த எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர் இதில் பண்ணியான் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!