தமிழகம்

அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள் அல்லது ஜெயிலுக்கு செல்வார்கள் செல்லூர் ராஜு அண்ணனை போன்று 2500 பேர் கொண்ட EPS அணியில் 2000 நபருக்கு அந்த எண்ணம் உள்ளது. அவர் உடல் தான் அங்கு உள்ளது உயிர் ஓபிஎஸ் பக்கம் உள்ளது – மதுரை Ex MP கோபாலகிருஷ்ணன் பேட்டி

97views
மதுரை மாநகர் அவனியாபுரம் செம்பூரணி சாலையில் அமைந்துள்ள தனியார் மகாலில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான கோபாலகிருஷ்ணன்., மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் ஆகியோர் தலைமையில் புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கோபாலகிருஷ்ணன் கூறுகையில், எம்ஜிஆரை – அம்மாவை எதிர்த்து., துரோகத்தின் வழியில் எடப்பாடி பின்னால் சென்றுள்ள மாவட்ட செயலாளர் ஆர்பி.உதயகுமார் இழுத்து செல்லும் நபர்கள் அனைவரும் ஒன்று ஜெயில் அல்லது இறப்பு தான் இது துரோக வரலாறு. EPS இருக்க மாட்டார் அல்லது அதிமுகவில் இருக்க மாட்டார். துரோக வரலாறு யாரையும் விட்டுவைக்காது.அதிமுகவில் ஒரு ஆன்மிக சக்தி உள்ளது., இது மனிதனால் உருவானது அல்ல ஒரு புனிதனால் உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தின் ஆணிவேர் எங்கு உள்ளது என்று யாருக்கும் தெரியாது.
எடப்பாடியே என்னிடம் கூறியுள்ளார்., ராஜன் செல்லப்பாவை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு பயன்படுத்திவிட்டு விரட்டிவிடுவேன் என எடப்பாடி ராஜன் செல்லப்பாவை பற்றி கூறியுள்ளார்.
தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்துபேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலக்கிருஷ்ணன் கூறுகையில், OPS அவர்களின் கட்டுப்பாட்டுக்கினங்க கழகத்தில் வளர்ச்சி குறித்தும்., தலைமை சொல்லும் நிகழ்வுகளை அனைத்தையும் மதுரையில் உள்ள 10 தொகுதியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தொகுதி வாரியாக பகிர்ந்து வருகிறோம். அதிமுகவின் உண்மைத்தொண்டர்கள் OPS பின்னால் தொண்டர் அணியாகவும், பணத்திற்கும் பதவிக்கும் இருக்கும் 2500 பேர் EPS பின்னால் டெண்டர் அணியாகவும் உள்ளது
ஒன்றரைகோடி தொண்டர்களும்., பொதுமக்களும் OPS இருக்கும் இடத்தை தேடி பின்னால் வருகிறார்கள்.

எதிர்க்கட்சி .சட்டமன்ற துணைத்தலைவர் என RB உதயகுமார் என்று செய்தியாளர் கூறியதற்கு.?
அந்த வார்த்தை தவறு.? அவர் முதல்வர் என்று கூறிவதே தவறு.? இடைக்கால பொதுச்செயலாளர் என செய்திகளில் கூறுவது தவறு.? ஜூலை 11 பொதுக்குழு எத்தனை நாளில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். பொதுக்குழு மீண்டும் கூட்டி தேர்தல் நடைபெற்றதா.? எனவே அது செல்லாது.! திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் என அறிவித்தனர்.? அவர் தேவரின் தங்ககவசத்தை கையெழுத்து போட்டு வாங்கிக்கொடுதார.? நீதிமன்றமும் சபாநாயகரும் அதை ஏற்கவில்லை.! ஒரு குற்றத்திற்கு ஒருவர் தன்னை தானே ரவுடி ரவுடி என சொல்வது எந்தவித பிரயோஜனமும் இல்லை.! அதை காவல்துறையும்., நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் அப்படி கூறுவது முதலில் குற்றம்.
மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்., முன்னாள் துணை மேயர் என்ற முறையில் மழையால் மதுரையின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு.?
திமுக அரசின் அவல நிலை., ஸ்டாலின் ஆட்சிக்கு வரும்போது அவர் கூறியது தான் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு அவருக்கு இன்னும் விடியலை என்று நான் நினைக்குறேன்.
நீதிமன்றம் பற்றிய கருத்து சொல்லவில்லை., நியாயம் தர்மம் எங்கள் பின்னால் உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் வந்தது என ஐயப்பன் கூறியது குறித்த கேள்விக்கு.?
உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டது., Google சென்று இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று அதிமுக கட்சிக்கு நுழைந்து பார்த்தால் அதில் ஒருங்கிணைப்பாளர் என்று OPS தான் உள்ளார். ஆனால் EPS துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் பதவியில் இல்லை.
பதவியில் இல்லாத OPS அதிமுகவில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமனம் என்பது கீழ்பாக்கத்தில் உள்ளவர்கள் நான்தான் டாக்டர் டாக்டர் என்று கூறுவது போல உள்ளது என முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு.?
அவர் வெயில் காலத்தில ரொம்ப குழம்பிபோயிருக்கிறார்.? அவர் எங்கிருக்கிறது.? அவர் அதிகம் குடியிருக்கும் இடம் எது.? அதற்கு என்ன பெயர்.? அவர் அப்பா எங்கு இருக்கிறார்.? நான் எதுவுமே சொல்ல வில்லை நீங்கள் தான் அது அம்மா கோவில் என்று சொல்கிறீர்கள் அவர் தந்தையை புதைத்த இடம் அங்குதான் ஒன்று அதை சாமதி என்று சொல்லுங்கள் இல்லையென்றால் கோவில் என்று சொல்லுங்கள் ரெண்டும் சொன்னால் என்ன அர்த்தம்.? இதை சொல்லும் RB உதயகுமாரை நீங்கள் எந்தவகையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.? கடுமையான விமர்சனம் வைத்த RB உதயகுமரிடம் நீங்கள் கேளுங்கள் கோவில் என்று நீங்கள் சொல்றிங்க.? உங்க அப்பாவிற்கு சமாதினு சொல்றிங்க அப்ப கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியா ஆள் யார் என கேள்வி எழுப்பினார்.
தேர்தல் நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்வார்கள் என செல்லூர் ராஜு கூறியது குறித்த கேள்விக்கு.?
செல்லூர் ராஜு அண்ணனை போன்று 2500 பேர் கொண்ட EPS அணியில் உள்ள 2000 நபர்களுக்கு அந்த எண்ணம் உள்ளது. செல்லூர் ராஜு அவர்களை பற்றி உண்மையை கூற வேண்டும்., அவரை போன்று மரியாதைக்கூறிய கட்சியில் மதிக்ககூடிய உண்மை தொண்டர் அவர் உடல் அங்கு உள்ளது அவ்வளவுதான் அதிமுகவில் நிகழும் போராட்டம் யாருக்காணாது.? தொண்டர்கள் தான் இந்தஇயக்கத்தை வழிநடத்துவார்கள்.
MLA ராஜன் செல்லப்பா OPS பார்த்து பழைய 1000 ரூபாய் நோட்டு என கூறிவருவது குறித்த கேள்விக்கு.?
அவர் எண்ணம் அதை பற்றி உள்ளது., ஒரு மனிதனின் எண்ணம் எதை பற்றி இருக்குமோ அதே போல அண்ணன் ராஜன் செல்லப்பாவின் எண்ணம் பழைய 1000 ரூபாய் நோட்டை பற்றி உள்ளது. சிந்தனையை மாற்றி யோசிக்க வேண்டும். என முன்னாள் MP கோபாலகிருஷ்ணன் கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!