தமிழகம்

காட்பாடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொன்விழா ஆண்டு விழா

98views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பொன்விழா ஆண்டு முன்னிட்டு சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேலூர் மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொன்விழா முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வம், தலைவர் கருணாநிதி, பொருளாளர் சக்திவேல், இணை செயலாளர்கள் ரவி, சங்கர், பத்பநாபன், துணைத்தலைவர் மதன், வேலூர் மாவட்ட தலைவர் குமாரவேல், செயலாளர் நரேந்திரன், பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிர்வாகக் செயற்குழு உறுப்பினர் ராமன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!