தமிழகம்

ராஜபாளையம் அருகே முதியவர் புகைத்த பீடியால் சோள வயலில் தீப்பிடித்து, கொட்டகையில் அடைத்திருந்த 28 ஆடுகள் கருகி இறந்தன. 18 குட்டிகள் தீக்காயம் அடைந்தன.

104views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர், சேதுராஜா. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது ஆடுகளை, கொட்டகையில் அடைத்து வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் சில ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டார். மற்ற ஆடுகள் கொட்டகையில் இருந்தன.
இந்தநிலையில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 70) என்பவர், பீடியை புகைத்துவிட்டு அப்பகுதியில் உள்ள சோளக்காட்டில் வீசிச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென சோள வயல் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயானது வேகமாக அருகே உள்ள ஆட்டு கொட்டகைக்கும் பரவியது. இதில் 28 ஆடுகள் உயிரோடு கருகி பரிதாபமாக இறந்தன.
மேலும் 18 ஆட்டு குட்டிகள் தீக்காயம் அடைந்தன. இதுகுறித்து சேதுராஜா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் சார்பு ஆய்வாளர் ஜோதிமணி வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!