தமிழகம்

மதுரை சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் கனமழைக்கு மேற்கூரை இடிந்து சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

229views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமாகியுள்ளது.
மதுரை சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் கற்பகம் என்பவர் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்
20 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்ட நிலையில் தனது ஒரு மகனுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இவரது ஓட்டு வீடு நேற்று இரவு இடிந்து விழுந்து விழுந்தது இது அதிர்ஷ்டவசமாக தாயும் மகனும் உயிர்தப்பினர். தினசரி கூலி வேலைக்கு சென்று வரும் இவர்கள் அதில் கிடைக்கும் சிறிய வருமானத்தை வைத்து ஜீவனாம்சம்.நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களின் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் தற்போது வீடு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர்
மேலும் தங்களது இடிந்த வீட்டை அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!