தமிழகம்

மாண்டஸ் புயல் அபாயம் பாம்பனில் 2 ஆம் எண் கூண்டு ஏற்றம் 5 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்

45views
காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கே 560 கிமீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதையடுத்து பாமபன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 2ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ புயலாக வலுப்பெற்றது. புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே  மாண்டஸ் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு மேற்கு வடமேற்கு திசையில் 770 கிமீ தொலைவில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இதனால், டிச. மாலை முதல் டிச. 10 காலை வரை மணிக்கு 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச செல்லவில்லை.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தொழிலுக்கு கடற்கரையில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!