தமிழகம்

காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திறப்பு

39views
காரியாபட்டியில், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா கள்ளிக்குடி சாலையில் நடைபெற்றது.  விழாவில், மதுரை தியாகம் மாற்றுத்திறனாளி பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் அமுதசாந்தி தலைமை வகித்தார். திருநகர் விஷ்டூ எல்ப் டிரஸ்ட் நிறுவனர். விஸ்வநாத், முன்னிலை வகித்தார்.  அட்சய கரங்கள் நிறுவனர் சதுரகிரி வரவேற்றார்.  ஊரக வளர்ச்சி துறை வாழ்ந்து காட்டுவோம் திட்ட அணித் தலைவர் அம்சவேணி, பேரூராட்சி கவுன்சிலர் சத்தியபாமா தாமோதரக்கண்ணன், ஆறுமுகம், பிரின்ஸ், சித்தா மருத்துவர்கள் சீனிவாசன், வள்ளலார் நற்பணி மன்ற பொருளாளர் செளந்திரபாண்டியன், சேவாலயத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், சமுத்திரம் டிரஸ்ட் முத்துராஜா, தொழிலதிபர்கள் பாலா, ஆர்.கே. பில்டர்ஸ் கே.ஆலங்குளம், கருப்பையா கலந்து கொண்டார்கள். உறுப்பினர் மாதவி நன்றி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!