மே 26 விவசாயிகளின் போராட்டத்துக்கு மாயாவதி ஆதரவு
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை (மே 26) கருப்பு தினமாக அணுசரிக்க சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் மாயாவதி கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்திலும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது மே 26 போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ்...