மத்திய அரசு ஏற்படுத்திய ஆப்கன் சிறப்பு மையத்துக்கு 2,000 தொலைபேசி அழைப்பு
ஆப்கானிஸ்தானில் சிக்கி யுள்ள இந்தியர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தவற்காக வும் மத்திய அரசு அமைத்துள்ள ஆப்கன் சிறப்பு மையத்துக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் 2,000 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து...