தமிழகம்

தமிழகம்

அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, மனிதர்களையும், விலங்குகளையும் வேட்டையாடி வரும் புலியை, விலங்குகளின் உடல் வெப்ப நிலை மூலம் கண்டறியும் அதிநவீன கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, புதர்களில் பதுங்கியிருக்கும் விலங்குகளின் வெப்பநிலை...
தமிழகம்

நீலகிரி, சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு பெய்யக்கூடும்

நீலகிரி, சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " 6.10.21 நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு அமையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கக்கூடும் 7.10.21 வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 8.10.21 தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிந் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் 9.10.21...
தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்டங்களில் 39 ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாளஅட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் உரிய பாதுகாப்புடன் வந்து வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை...
தமிழகம்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்வோரை நம்பி ஏமாற வேண்டாம்: காவல் ஆணையர் எச்சரிக்கை

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் வசூலிப்போரை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அண்மைக்காலமாக அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை டிபிஐ வளாகத்துக்கு வரவழைத்து, போலி பணி நியமன ஆணை வழங்கி சிலர் மோசடியில் ஈடுபட்டனர். இதேபோல, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை பயன்படுத்தியும் மோசடி நடந்துள்ளது. இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ``அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு உள்ளது என்று கூறியும், அவர்களுடன் எடுத்த புகைப்படங்களைக்...
தமிழகம்

பாமக தனித்து நிற்பதால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை: பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து நிற்பதால் பாஜக, அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் அருகே முடிச்சூர் கிராம ஊராட்சியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து எச்.ராஜாநேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதால் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிபெறும். பிரிந்து நிற்பதால் பாமகவுக்குதான் நஷ்டம். 4 மாத திமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எங்கள் கூட்டணிக்கு பலமே...
தமிழகம்

மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்துவோர் மீது நடவடிக்கை – தமிழக அரசு

மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக உள்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்றாம் பாலினத்தவர் மற்றும், தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக டிஜிபி விதிகளில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக உள்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்....
தமிழகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; 39 ஒன்றியங்களில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் 9-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், பரிசீலனையின்போது 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 25-ம் தேதி மாலை இறுதி வேட்பாளர்...
தமிழகம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் இஓஎஸ்-4 (ரிசாட்-1ஏ) மற்றும் இஓஎஸ்-6 (ஓசோன் சாட்-3) ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதல் சிறிய வகை ராக்கெட் (எஸ்எஸ்எல்வி) மூலமாக இஓஎஸ்-2 என்ற மைக்ரோசாட் செயற்கைக் கோளும் செலுத்தப்பட உள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் ஏவப்படும் செயற்கைக் கோளின் செயல்பாடு தகுதிகுறித்து பல்வேறு கட்ட சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த 3 செயற்கைக் கோள்களும் விவசாயம், உள்நாட்டு விவகாரங்கள், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கண்காணிப்புக்கு...
தமிழகம்

தமிழகத்தில் இன்று மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: 25 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

தமிழகத்தில் 4ஆவது முறையாக பிரமாண்ட தடுப்பூசி முகாம் மாநிலமெங்கும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 4ஆவது முகாம் இன்று 20 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 3 முகாம்களில் மட்டும் சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 35% பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை என்றும் 65% பேர் 2ஆவது தவணை ஊசி செலுத்திக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அவர்கள் இன்றைய முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை,...
தமிழகம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ‌‌‌‌‌‌‌கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வாங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ...
1 505 506 507 508 509 544
Page 507 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!