தமிழகம்

தமிழகம்

அதிமுக உட்கட்சி தேர்தல்;இன்று தொடக்கம்!

அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள் முதற்கட்டமாக இன்றும்,நாளையும் நடைபெறுகின்றன. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி,அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,அதிமுக கிளை நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல் இன்று (13.12.2021) முதல் 23.12.2021 வரை நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்...
தமிழகம்

கெமிக்கல் நிறுவனத்தில் வாயு கசிவு.. ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி – அமைச்சர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாமோதரன் என்பவர் ஸ்ரீதர் கெமிக்கல் என்ற குடோன் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 900 கிலோ குளோரின் கேஸ் மிகப்பெரிய கலனில் சேமிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலைக்கு தேவையான அளவில் சிறிய கலன்களுக்கு மாற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று, வழக்கம் போல் பெரிய கலனிலிருந்து சிறிய கலனுக்கு கேஸ் மாற்றும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தால் குளோரின் கேஸ் கசியத் தொடங்கியது. கேஸ் மேலும் பரவத் தொடங்கியதையடுத்து அருகில் இருந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்கள் மயக்கமடைத்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக்குழுவினர் மயக்கமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈரோடு, சித்தோடு, பவானி போன்ற பகுதிகளிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து தொழிற்சாலைக்குள் சென்று கேஸின் வ வீரியத்தை குறைத்தனர். இந்த...
தமிழகம்

அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது . இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.  ...
தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்: தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை நிகழ்ச்சிகளில் ஒலிப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை. மேலும், எந்த வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக...
தமிழகம்

ஆளுங்கட்சியினர் மிரட்டுவதால் அரசு அதிகாரிகள் அச்ச உணர்வுடன் உள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியினரின் மிரட்டலால் தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஒருவித அச்ச உணர்வுடன் பணியாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் ஊக்குவிக்கப்பட்டனர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதுதிமுக ஆட்சியில் சமூக விரோதசெயல்களில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், சாதகமாக செயல்படாத அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் செய்தி கள் வருகின்றன. ராதாபுரம், இருக்கன்குடி பகுதிகளில் உள்ள கல்குவாரியில் முறைகேடாக அதிகளவு வெட்டி கடத்தப்படுவதை கண்டறிந்து, கடத்தலில் ஈடுபட்ட திமுகவினருக்கு ரூ.20 கோடி அபராதம் விதித்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர்...
தமிழகம்

சர்ச்சைக்குரிய பதிவு: யூடியூபர் மாரிதாஸ் கைது

குன்னுார் அருகே ெஹலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்த சம்பவத்தில் தி.மு.க.வை விமர்சித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பா.ஜ. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் 40 மதுரையில் கைது செய்யப்பட்டார்.மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரிய காலனியில் வசிக்கும் மாரிதாஸ் அவ்வப் போது தி.மு.க. அரசை விமர்சித்து டிவிட்டரிலும் யூடியூபிலும் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் இறந்தனர். இதுதொடர்பாக மாரிதாஸ் டிவிட்டரில் தி.மு.க.ஆட்சி குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இது பிரிவினைவாதத்திற்கு எதிரானது என்பதால் மதுரை போலீசார் தாங்களாகவே முன்வந்து மாரிதாஸ் மீது சைபர் கிரைம் சட்டப்பிரிவு 153 ஏ 505(2)ன்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 153 ஏ பிரிவு என்பது...
தமிழகம்

மாணவர்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியை கற்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர்

இருமொழிக்கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்கலாம் ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் உள்ளார். இருமொழிக்கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்கலாம். ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். மேலும், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏதாவது ஒரு மொழியை கற்கலாம். சர்வதேச அளவில் ஆங்கிலமும், மாநில அளவில் தமிழும் உள்ளன என தெரிவித்துள்ளார்....
தமிழகம்

தேசிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

தேசியக் கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லவைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 174 மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கணபதி அரசுப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, ''ஒரு பெண் குழந்தையை படிக்க வைத்துவிட்டால் அந்த குடும்பமே படித்துவிடும். அந்தவகையில் தமிழகத்தில் 70 சதவீத பெண்கள் எழுத்தறிவுடன் நடைபோடுவதற்கு பெரியார் செய்த சமூகப் பணிகள் முக்கிய காரணமாகும். எனினும், கிராமப்புறங்களில் பெண்களை படிக்க வைக்க பெற்றோருக்கு இன்றும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஆசிரியர்கள் கண்டிப்பது தங்களின்...
தமிழகம்

சென்னை – விளாடிவோஸ்க் கடல்வழி போக்குவரத்தால் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் பலன்பெறும்: ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் அவ்தீவ் தகவல்

சென்னை - விளாடிவோஸ்க் (ரஷ்யா) கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டத்தின் மூலம் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் பலனடையும் என்று ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் தெரிவித்துள்ளார். இந்தியா - ரஷ்யா இடையிலான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொண்டார். இந்த மாநாட்டின் பலன்கள் குறித்து 'இந்தியா- ரஷ்யா இடையேயான சிறப்பு கூட்டாண்மை' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ரஷ்ய துணைத் தூதரகம் சார்பில் சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் பேசியதாவது: ரஷ்யாவுக்கு மிகவும் நம்பகமான நாடாக இந்தியா திகழ்கிறது. இதன் ஒரு அம்சமாக நடத்தப்பட்ட உச்சி மாநாடு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் கல்வி, வர்த்தகம், எரிசக்தி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு...
தமிழகம்

பேரறிவாளன் வழக்கு.. கவர்னர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என கோரினார். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நெடு நாட்களாக பேரறிவாளன் விவகரத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், பேரறிவாளன் வழக்கு தொடர்பான கோப்புகள் மீது முடிவெடுக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும், மாநில அரசின் தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவு எடுக்க வேண்டும். மீண்டும் இவ் வழக்கை ஒத்திவைக்க கோரக்கூடாது என நீதிபதிகள்...
1 491 492 493 494 495 545
Page 493 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!