தமிழகம்

தமிழகம்

விரைவில் வெளியாகிறது தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தகவல்

தமிழகத்துக்கான மாநில கல்விக்கொள்கை விரைவில் வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 1,000 பழங்குடி மர இனங்களின் கன்றுகளை நடும் விழா நேற்று நடைபெற்றது. கிண்டி ரோட்டரி கிளப் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார். அப்போது மாணவர்களிடையே அவர் பேசியதாவது: மாநிலக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என நான் ஏங்கியது உண்டு. இந்திய அளவில் சிறப்புமிக்க கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் பலரும் ஆர்வமாக உள்ளனர். கல்வியைத் தாண்டி விளையாட்டு, சமூகப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். கல்லூரியில் தற்போது 1,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. ஆனால், இங்குப் படிக்கும் 5 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொருவரும்...
தமிழகம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி மீது நடவடிக்கை: புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று சூழலில் 10,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படுகிறது. தேர்வெழுதும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலனைகருத்தில்கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்நிலையில், டிச.16 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளதேர்வுகளின்போது கூடுதல் நடைமுறைகளைப் பின்பற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தேர்வு நாளில் காலை 10.45 மணிக்கு பாஸ்வேர்டு அனுப்பப்படும். காலக்கெடு நேரமான 10.45மணிக்குள் அனைத்து மாணவர்களும் தேர்வு...
Uncategorizedதமிழகம்

திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் அதிமுக நிர்வாகிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவி வழங்க வேண்டும், பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம், பொங்கல் பரிசுத்தொகைஅறிவிக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அதிமுகஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாக ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. சென்னையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராயபுரம், வள்ளுவர் கோட்டம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
தமிழகம்

காணிக்கை நகைகளை உருக்க விதித்த தடை உத்தரவு மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிப்பு

  கோவில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்ற உத்தரவை, மேலும் ஆறு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்பாக, அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்த நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் டிபாசிட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நகைகளை பாதுகாக்கும்படி, அறங்காவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தலாம். நகைகளை உருக்கும்படி உத்தரவிட முடியாது.தமிழகத்தில், ஏராளமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஊழியர்கள், தக்காராக பணியாற்றுகின்றனர். அவர்களால் கொள்கை முடிவு எடுக்க முடியாது. எனவே, அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். நகைகளை உருக்குவதற்கு...
தமிழகம்

ரூ.14.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்: முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் 'கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்' அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 5.38 லட்சம் சதுரஅடி பரப்பளவில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம், பேருந்து நிறுத்தம், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் இந்த பணிகள் நடைபெற்று வந்தன. கரோனா பாதிப்பு காரணமாக இந்த பணிகள் முடங்கின. அதன்பிறகு இந்த பணிகள் தொடங்கி நடைபெற்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதியன்று இந்த இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க...
தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை !

அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் புகாரின் அடிப்படையில் ஒவ்வொருவர் வீடாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அவ்வகையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த வரிசையில் தற்போது அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர்...
தமிழகம்

இனி எங்கும் அலைய தேவை இல்லை.! விவசாயிகள் வாட்ஸ் அப் மூலமே புகார் அளிக்கலாம்.! தமிழக அரசு புதிய முயற்சி

தமிழகத்தில் உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார்களைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாட்டில் நெற்பயிர் 18.5 லட்சம் ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியம், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்திப் பயிர்கள் சேர்த்து 46.2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுவருகிறது. இதற்குத் தேவையான உரங்கள் மாநிலத்தில் உள்ள எட்டாயிரத்து 100 தனியார் விற்பனை நிலையங்கள், நான்காயிரத்து 354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் மாநில அரசுக்குத் தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. ஒதுக்கீடுசெய்யப்பட்ட உரங்கள் சுமார் 15 உர நிறுவனங்கள் வாயிலாக...
தமிழகம்

ஆங்கிலப் புத்தாண்டு தினம்: கடற்கரைகளில் பொது மக்கள் கூட அனுமதியில்லை

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி, கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. கரோனா நோய்த் தொற்று தடுப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: பண்டிகைக் காலங்களில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் கூடத் தடை: பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சமுதாய, கலாசார,...
தமிழகம்

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800 அரங்குகளுடன் ஜன.6-ல் 45-வது சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து விருதுகளை வழங்குகிறார்

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் 45-வது புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் ஜன.6-ம் தேதி தொடங்கி வைத்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் வழங்குவார் என்று பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) புதிய தலைவர் எஸ்.வயிரவன், புதிய செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பபாசி சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 45-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.6 முதல் 23-ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, 2022-ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் வழங்குகிறார். விழாவில், சிறந்த...
தமிழகம்

சென்னையில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள்

சென்னையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பாகவும், பொதுப்பணித்துறை சார்பாகவும் பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைத்து வருகின்றன. சமீபத்தில் கட்டிமுடித்த வேளச்சேரி மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாநகராட்சி ஏற்கனவே கணேசபுரத்தில், ஓட்டேரியில் மற்றும் தி. நகர் உஸ்மான் சாலையில் என 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது. இதற்காக 335 கோடி ரூபாயை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மூலம் பெற்று இந்த புதிய மேம்பாலகளை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கணேசபுரத்தில் 142 கோடி ரூபாயில் 680 மீ நீளமும் மற்றும் 15.20 மீ அகத்திற்கு 4 வழி சாலையாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதே போல்...
1 490 491 492 493 494 545
Page 492 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!