தமிழகம்

தமிழகம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 18-ம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17-ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (ஜன.14) முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப முடியாத நிலை இருந்தது. தற்போது திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கள் கொண்டாட சென்றவர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள...
தமிழகம்

ஆறாயிரம் ஆண்டுகள் பழமையானதும் சிறப்பும் வாய்ந்தது தமிழிசை: பாரதிய வித்யா பவனில் நடைபெறும் தமிழிசை தொடக்க விழாவில் டாக்டர் சுதா சேஷய்யன் புகழாரம்

தமிழிசை ஆறாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார். மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் தமிழிசை விழாவை டாக்டர் சுதா சேஷய்யன் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். இவ்விழாவில் அவர் பேசியதாவது: திருமயிலை பாரதிய வித்யா பவனில் நடக்கும் தமிழிசை விழாவில் பங்குபெறவிருக்கும் கலைஞர்களுக்கு வணக்கம். திருமயிலைதொன்மையானது. தமிழிசை அதைக் காட்டிலும் தொன்மையானது. இரண்டும் ஒன்றிணைவது வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. திருவள்ளுவரின் `குழல் இனிது' என்னும் குறளின் மூலம் பல விதமான வாத்தியங்களின் இசை அவர் காலத்திலேயே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இசை குறித்த நூல்கள் தமிழில் இருந்திருக்கும். அத்தனை பாரம்பரியமும் தொன்மையும் வாய்ந்தது தமிழிசை. மிடறு என்பது தொண்டையைக் குறிக்கும். மிடற்றிசை என்பது பாடுவது. யாழ் இசைத்தபடி பாடியவர்கள் பாணர்கள் எனப்பட்டனர். பெரிய யாழ்இசைத்தவர்கள்...
தமிழகம்

மதுரை, கோவை, திருச்சி உட்பட 5 வானொலி நிலையங்களை பிரச்சார் பாரதி முடக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை ஆகிய 5 வானொலி நிலையங்களை முடக்க கூடாது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் நிறுத்தி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையில் இருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரச்சார் பாரதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடந்த செப்.29-ம் தேதி நான் கோரியபோது, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரச்சார் பாரதி விளக்கம் அளித்தது. ஆனால், முடக்கும் முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஒரு மாநிலத்துக்கு, நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம் ஒன்று போதும் என பிரச்சார்...
தமிழகம்

முதல்வரின் மருத்துவக் காப்பீடு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: செய்தியாளர்களுக்கு அட்டைகளை வழங்கினார்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அதிக சிகிச்சை முறைகளுடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான ஆணைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களுக்கான காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது செயல்படுத்தப்படும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்தமாதம் முடிவடைகிறது. முன்னதாக, கடந்த 2021-22 ஆண்டுக்கானசுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, சென்னை எம்ஆர்சி நகரில் நேற்றுநடந்த நிகழ்ச்சியில், முதல்வரின்விரிவான காப்பீட்டுத் திட்டத்தை ஜன.11 (இன்று) முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதற்கான ஆணையை பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அத்துடன், முதல்வர் முன்னிலையில், தமிழக அரசுக்கும், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.1,248.29 கோடிநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 11 தொடர்சிகிச்சை முறைகள்,...
தமிழகம்

பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்குகிறது. இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம் தேதி ஒருநாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 597ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 12,895ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்திருப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இப்பணி கடந்த ஜன.16 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக சனிக் கிழமை 18வது தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது, "கடந்த 2021...
தமிழகம்

சென்னை ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி ஆளுநர், மத்திய அமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு: மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவரைத் தொடர்ந்து, ஆளுநர் ரவியை, மத்திய தகவல் மற்றும்ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில், ''தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம், நமதுமாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது'' என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக புகார் அளித்தது...
தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு??.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் ஒமைரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுபாடு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் வைரஸ் பரவல் குறையாததால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுபாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்களுக்கு தடை, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் விதித்தது. அந்த வகையில் கடந்த...
தமிழகம்

பூஸ்டர் தடுப்பூசி திட்டம் நாளை தொடக்கம்; இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜன. 4-வது வாரத்தில் கலந்தாய்வு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரம் தொடங்குகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு மண்டலம், 175-வது வார்டு 17-வது குறுக்குச் சாலையில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்ற மெகாதடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசிபோடும் பணியை நாளை (ஜன.10)பட்டினம்பாக்கம் இமேஜ் அரங்கில்முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் 35 லட்சத்து 46ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாகக் கண்டறியப்பட் டுள்ளனர். 27 சதவீத நீட் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு கலந்தாய்வை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம்அறிவித்திருக்கிறது. அந்தவகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு...
தமிழகம்

“அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது” – மு.க.ஸ்டாலின் உறுதி!

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி உள்ளனர். குறிப்பாக பல இடங்களில் கருணாநிதியின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் கலைஞரின் பெயரை மறைக்கும் வகையில் செடி, கொடிகளை நட்டு வைத்தனர். இராணி மேரி கல்லூரியிலும் கலைஞர் பெயர் மறைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் புதியதாக கட்டப்பட்ட சட்டசபை கட்டிடத்தை ஆஸ்பத்திரியாக மாற்றினார்கள். கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டங்களும் முடக்கப்பட்டன. இப்படி தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டது பற்றி பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அதுபோன்று செயல்படவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. அதனால் தான் ஜெயலலிதா நினைவிடத்தை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகிறார்கள். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நேற்று இந்த சபையில்...
தமிழகம்

கூட்டுறவு சங்க இயக்குநர்களின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பு; பேரவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு

கூட்டுறவு சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவு பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார். இந்தசட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு இந்த சட்ட முன்வடிவு பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம்...
1 439 440 441 442 443 499
Page 441 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!